52 | பெரியோர் வாழ்விலே | விளையாடச் செல்வார். நண்பன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு செண்பக மரம் இருந்தது. அதில் விவேகானந்தரும், அந்த நண்பனும் ஏறி விளையாடுவார்கள். விவேகானந்தர் அதன் உச்சியில் ஏறிக் கிளைகளில் கால்கள் இரண்டையும் மாட்டிக் கொண்டு தலை கீழாகத் தொங்குவார் ; கிளைக்குக் கிளை தாவுவார் ; மேலிருந்து கீழே குதிப்பார் ; கீழிருந்து மேலே மள, மள என்று ஏறுவார். இப்படிப்பட்ட ‘சர்க்கஸ்’ வேலைகளில் அவருக்கு விருப்பம் அதிகம்.
மரத்தில் ஏறி இப்படிக் குறும்புகள் செய்வது அந்த வீட்டிலிருந்த ஒரு கிழவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர், ஒருநாள் விவேகானந்தரிடமும், அவருடைய நண்பனிடமும் வந்து, “நீங்கள் அந்த மரத்தில் ஏறக்கூடாது. ஏறினால் ஆபத்துதான் ! அந்த மரத்திலே ஒரு பிரம்ம ராட்சகன் இருக்கிறான். அவன் நள்ளிரவிலே வெள்ளை உடையுடன் இங்குமங்கும் சுற்றித் திரிகிறான். யாராவது மரத்தில் ஏறினால், அவன் அவர்கள் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கைலாயத்துக்கு அனுப்பிடுவான். ஜாக்கிரதை !” என்று கட்டுக் கதை கட்டிப் பயமுறுத்தி விட்டுப் போனார்.
இந்தக் கதையைக் கேட்டதும் அவர்கள் பயந்து விடுவார்கள், அப்புறம் அந்த மரத்துப் பக்கமே தலைகாட்டமாட்டார்கள் என்பது அவர் நினைப்பு.
ஆனால் விவேகானந்தர் இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை. தைரியமாக மரத்தில் ஏறி விளையாடச் சென்றார். ஆனால் அவருடைய நண்பனோ |
|
|
|
|