| 316 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மேலே கண்ட வரிசை காலக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொண்டதாகும். இந்தக் காலக் கண்ணோட்டத்துக்கு அடிப்படையாய் அமைந்த செய்திகள் அடுத்துள்ள அட்டவணை யிலும் அதனை அடுத்த விளக்கத்திலும் தரப்படுகின்றன. | அரசர் | பாடிய புலவர் | பாடல் | | போரவைக்கோப் பெருநற்கிள்ளி | சாத்தந்தையார், நக்கண்ணையார் | புறம் 80, 81, 82, 83, 84, 85 | | முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | ௸ 13 | | வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி | கழாத்தலையார் | ௸ 368 | | இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி | உலோச்சனார், ஒளவையார், பாண்டரங்கண்ணனார், பேரிசாத்தனார் | ௸ 377 ௸ 367 ௸ 16 ௸ 125 |
மேலே கண்ட அட்டவணையில் ஒருவனைப் பாடிய புலவர் மற்றொருவனைப் பாடிய தொடர்புச் செய்தி காணப்படவில்லை. இந்த நிலையில் இவர்களைக் கால வரிசைப்படுத்த வேறு சான்றைத்தான் தேடவேண்டியுள்ளது. மேலே கண்ட எட்டுப் புலவர்களால் பாடப்பட்டவேறு அரசர்களை நினைவுகூர்வோம். | புலவர் | அரசர் | பாடல் | | சாத்தந்தையார் | தித்தன், ஆமூர்மல்லன், பொருநன் | புறம். 80, ௸ 80, 81,82, ௸ 82 | | நக்கண்ணையார் | அழிசி | நற். 87 | | உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | அந்துவஞ்சேரல், ஆய் அண்டிரன் | புறம். 13, ௸ 127, 135, 247, 374,375 |
|