316 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுர மொய்ம்மணி நூலின் முல்லையங் கிண்கிணி கௌவிய வேனவுங் காலுக் கணிந்தாள். 2 குறங் செறியொடு கொய்யலங் கார நிறங்கிளர் பூந்துகி னீர்மையி னுடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகா ழறிந்த தமைவர வல்குற் கணிந்தாள். 3 ஆய்மணி கட்டி யமைந்தவிலைச் செய்கைக் காமர் கண்டிகைக் கண்டிரண் முத்திடைக் காமற்பொற் பாசங் கொளுத்திக் கவின்பெற வேய்மருண் மென்றோள் விளங்க வணிந்தாள். 4 புரைதபு சித்திரப் பொன்வளை போக்கி லெரியவிர் பொன்மணி யெல்லென் கடகம் பரியகம் வால்வளை பாத்தில் பவழ மரிமயிர் முன்கைக் கமைய வணிந்தாள். 5 சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்க லருந்தித் திருந்துங் கயிலணி தண்கடன் முத்தின் றகையொரு காழெனக் கண்ட பிளவுங் கழுத்துக் கணிந்தாள் 6 நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக் கோலங் குயின்ற குளஞ்செய் கடிப்பிணை மேலவ ராயினு மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெறப் பெய்தாள். 7 கேழ்கிளர் தொய்யகம் மாண்முகப் புல்லகஞ் சூளா மணியொடு பொன்னரி மாலையுந் தாழ்தரு கோதையுந் தாங்கி முடிமிசை யாழின் கிளவி யரம்பைய ரொத்தாள்.6 8 |