| 20 | மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ |
| 25 | என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. 2 |
ஜீவ: | | பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? |
| 30 | பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! 3 |
குடி: | | எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், |
| 35 | இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? |
ஜீவ: | 40 | கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? 4 |
ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட. செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் - உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு.