குடி: | 45 | குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் |
| 50 | மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; |
| 55 | இன்னம் பலரும் இங்ஙனம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் |
| 60 | பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. |
ஜீவ: | | படுமோ அஃதொரு காலும்? குடில! |
| 65 | மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள துரையே. 5 |
குடி: | | உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் |
| 70 | தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே 6 |
ஜீவ: | | நல்லது! குடில! இல்லை யுனைப்போல் |
மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந் தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல்.