ஒற்றன்: | | மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! |
ஜீவ | 110 | எங்குளார் நமது தூதுவர்! |
ஒற்: | | இதோ! இம் |
| | மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! |
| | (ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) |
குடி: | | (தனதுள்) |
| | ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. |
| 115 | போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. |
ஜீவ: | | (தனதுள்) |
| | துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் |
| 120 | படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! |
| | (குடிலனை நோக்கி) |
| | குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! |
| | (குடிலன் ஓலை நோக்க) |
குடி: | 125 | நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய |
வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் -பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன்.