| 130 | உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! |
ஜீவ: | | பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. |
குடி: | 135 | செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. |
ஜீவ: | 140 | வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி |
| 145 | எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். |
குடி: | | அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். |
ஜீவ: | | இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் |
| 150 | ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் ... (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) |
சேவகன்: | | விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. |
குடி: | | நல்லது! நல்லது! செல்லா யப்பால் |
| | (சேவகன் போக) |
| | (தனதுள்) |
திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர்
வரி 144 - 145. இது ஒரு பழமொழி