பக்கம் எண் :

232மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

நான்காம் அங்கம்

முதற் களம்

இடம் :படை பயில் களம்.

காலம் :காலை.

(பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை
எதிர்பார்த் தொருபுறம் நிற்க.)

(நேரிசை ஆசிரியப்பா)

குடிலன்: பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது...
   (பெருமூச்செறிந்து)
  (தனிமொழி)
  கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ!
ஒருவன தாசைப் பெருக்கால் உலகில்
வருதுயர் கடலிற் பெரிதே! வானின்
 5எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்
ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில்
மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே !
மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள்
இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை
 10வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல்,
நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர்
உற்றார் பெற்றார் நட்டார் என்றிப்
படியே பரவுமே படியெலாம் துயரம் !...

(சற்று நிற்க)

  என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி


காண் தகும் - காணத்தக்க, மதிப்பார் - கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய - சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும்.