| | கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ. முடிபுனை மன்னர் |
| 290 | வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே, ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? |
| 295 | பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல் நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ இறைவ! |
| 300 | வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்! ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. |
| 305 | ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை! |
ஜீவ: | | ஆ!ஆ!சரியே! |
குடி: | | ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை? |
ஜீவ: | 310 | அரசல எனினமக் காம்பிழை என்னை? |
குடி: | | திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் |
கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம்.