பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்295

   மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும்
 345தகைமையில் தகுவதும் இதுவே. அதனால்,
குடிலா! மறுக்கலை.
குடி:  அடியேன். அடியேன்.
ஜீவ: இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ
முன்னநாம் வைத்த முகூர்த்தம்?
குடி:  ஆம்!ஆம்!
ஜீவ: செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே!
 350ஆவா! எவ்வள வாறின தென்னுளம்!
ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே!
பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர்.
குடி:  பிரிந்துநீர்
  இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள்
வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே.
ஜீவ:355நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம்.
ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ
வருகுதும். அதற்குள் வதுவைக்
கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே!      4
  (ஜீவகன் போக)
குடி: தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை.
(தனிமொழி)
இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்?
முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே!
மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள்


344 - 345 அடி, “குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் - (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். ‘தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை’ - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி - பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து.