| | மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின் |
| 90 | கருணையோ காய்தல், தருமநல் லுருவே! |
புரு: | | (தனதுள்) |
| >யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம். |
| | (குடிலனை நோக்கி) |
| | வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி. |
குடி: | | ஆண்டகை யறியா ததுவென்? இன்று மாண்டவர் போக மீண்டவ ரேனும் |
| 95 | மாளா வழிநீ ஆளாய் என்னக் கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில் வாளா மாளும் மனிதர் தொகுதி எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம். |
| 100 | எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ? வதுவை முற்றுறா வயவரெத் தனையோ? புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ? நொந்த சூலினர் நோவு பாராது |
| 105 | வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ? தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ? செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத் துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ? |
புரு: | 110 | சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு |
| | சாற்றா தொழிந்ததென்? |
குடி: | | சாற்றிலென்? |
| | போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும். அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும் |
பொருநர் - போர்வீரர். வயவர் - வீரர். மள்ளர் - வீரர். செருநர் - போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன்.