பக்கம் எண் :

314மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

   சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்
 140கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்.
பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா
றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.
புரு: 145சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?
குடி: அரசன தந்தப் புரமது சேர
யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங்
கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.
புரு: 150உண்மை?
  (சேவகரை நோக்கி) யாரது?
குடி; உதியன் கண்முன்
மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?
   (அருள்வரதன் வர)
அருள்: அடியேன்!
புரு: கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்.
   (அருள்வரதன் போக)
  (குடிலனை நோக்கி)
  எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
குடி: அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
 155எளியேற் கபய மியம்புதி யிறைவ!


முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று - அழித்து.

142 - 144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் - அடைதற்கருமையான. கைதவன் - பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு.