பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்93

(நேரிசை ஆசிரியப்பா)

சேவ: வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல்
ஏழுல கெவற்றிலும் உண்டோ?
 80வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே.
குடி: (தனிமொழி)
  நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில்
  (சேவகன் போக)
  மதியிலி! என்னே மனிதர் மடமை!
இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம்
தருமந் தானம் என்றுல கறியுங்
 85கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக்
காணின் நாணமாம்; அவரவர் தமக்கா
எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும்
பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந்
தந்நயங் கருதி யன்றித் தமைப்போற்
 90பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ?
புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல
பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல்
யாத்திரை போன நூற்றுவர், சோறடு
பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக
 95ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல்
இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு
எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? -
ஆயினும், அரசனைப் போலிலை
பேயர் பெரிய மேதினி யெங்குமே.

முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.


வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம்.

பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது.