2.4 தொகுப்புரை | |||||||||||||||
இப்பாடல்களில்
காதல் உணர்வின் பல்வேறு
தோற்றங்களைக் கண்டீர்கள்; தலைவி, தோழி, தலைவன், பாகன்
போன்ற பாத்திரங்களின் பேச்சுகளில் சொல்லைத்தாண்டி விரியும்
மனக்குறிப்புகளை உணர்ந்தீர்கள். அன்புப்
பெருக்கின்
முன்னிலையில் காட்டுக்கோழி தோழனாகவும்
புன்னைமரம்
தங்கையாகவும் மாறிவிடும் உலக ஒருமைப்பாட்டைக் கவிஞர்கள்
உங்களுக்குக் காட்டினார்கள்.
|