| இந்நூலக வாயிலாக இலக்கண நூல்களை வெளியிட விழைந்தபோது,
பல்வேறு ஒப்பு நூல்களின் ஆதாரங்களும், 
விரிவான முன்னுரையும், போதியவிளக்கமும், அரும்பத விளக்கமும், பல பிற்சேர்க்கைகளும், தந்து
பதிப்பித்தால் மொழிநூல் ஆய்வாளருக்கும், தமிழை விரும்பிக் கற்கும்
சான்றோர்களுக்கும், மாணவ 
அன்பர்களுக்கும் உதவியாய் இருக்குமென
முன்னாள் மதிப்பியற் செயலாளர் அவர்கள் வெளியிடக் 
கருதி ஆவன
செய்தவாறே இப்பதிப்பு வெளிவருகிறது. இந்நூல் வெளியிட ஆதாரமாக அமைந்தது புகழ்மிகு தொழிலதிபரும்,
தமிழ்க் காவலருமான 
பொள்ளாச்சி உயர்திரு. ந. மகாலிங்கம், பி.எஸ்ஸி.,
எம். ஐ. இ., அவர்கள் நூலகத்திற்கு 
மனமுவந்து அளித்த கையெழுத்துப்
படியேயாகும். இப் ‘‘படி’’ பல நாட்களுக்கு முன் அச்சிட்ட பழைய 
நூல்
ஒன்றிலிருந்து எழுதப்பட்டுள்ளது. அன்னாருக்கு யாம் பெரிதும் நன்றிக்
கடப்பாடுடையோம். இதனை மிகச் சிறப்பாக வகுத்தெழுதிப் பதிப்பித்துதவிய பண்டித
வித்துவான் திரு தி. வே.கோபாலையர், எம்.ஏ.,பி.ஓ.எல்., அவர்கட்கும்,
செம்மையோடு விரைவில் வெளிவரத் தக்க 
முறையில் செயலாற்றிய துணை
நூலகர் திரு.
எம். சீராளன், பி. ஏ., அவர்கட்கும், காலத்தோடு
நன்முறையில் அச்சிட்டுத் தந்த 
குடந்தை ஜெமினி அச்சக உரிமையாளர்
 அவர்களுக்கும் கனிந்த உள்ளத்தோடு நன்றி கூறிப் 
பாராட்டுகின்றோம். இத்தகைய பணிகளுக்கு ஆக்கமளித்துப் பேணி வரும் நமது தமிழக
அரசை நன்றியோடு போற்றி 
மகிழ்கின்றோம்.
 
 
 | தஞ்சாவூர் | } | அ. வடிவேலன், |  
 | 3-7-1974 | சரசுவதி மகால் நூல்
நிலையம். |  |