458

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்



அரங்கேற்றுவிக்கும் முறை
 

‘செய்யுள் கொளும்இடம் சித்திரத் துகிலின்

ஆத்து விதானித்து அலங்கல் நாற்றித்

தோரணம் கதலி துவசம் உயர்த்திப்

பூரண கும்பம் பொன்முளைப் பாலிகை

வெண்பொரி தீபம் மிளிர்தரச் சமைத்துப்

பல்இயம் இயம்பப் பாவையர் ஆடப்

பாணரும் மகளிரும் பல்லாண்டு இசைதர

அந்தணர் நசைதர வாழ்த்த ஒண்பூ

மலராடை புனைந்துஒரு தவிசின் மேவி

எதிராய் வேறும்ஓர் தவிசில் இருத்தி

மங்கலப் பாடல் ஏற்றுஉளம் மகிழப்

பொன்புவி வத்திரம் பூண்பன பிறவும்

உதவி ஏழடி புலவ னுடன்போய்

மீள்வது கடன்என விளம்பினர் மேலோர்.’

 

55

தமிழ் - குலமகள்
 

‘மொழியின் மதுரம் கனிந்த பொருட்கவி

சொல்வாய் யோனி சூதகம் இலக்கியம்

வாய்ந்தநா இலிங்கம் மனம்வாக்கு இழைகள்

கலவி ...   ...    ...    ...    வேட்கை

விந்து இலக்கணம் மேவல் நிறுவுதல்

கருப்பம்அக் கவியில் காட்டும்முச் சீரில்

சேர்ந்த எழுத்தே சேயாய் முற்றி

ஓங்கிடு சீ  ......  ......  ந்து

சிறந்தமுச் சீரில் பிறந்து வளர்தலால்

தமிழ்குலப் பெண்ணெனச் சாற்றல் தகுமே.’ 

 

56

பெண்ணின் சுற்றத்தார்
 

‘தந்தை புலவன்; தாயவள் தரித்திரம்;

அக்கவிப் பொருளை அணியாய் விரித்து