வனைஇயற்பேரினைத் தக்கதே எதுகையாய்
வரநாட்டியும் தனிச்சொல்
மறுத்து இன்னிசைக் கலியின்வெண்பாவினால் தலை
மகன் இரந்தே குறைபெறாது
அனைவர் அறிமடல் ஊர்வதென்ன ஈரடிஎதுகை
ஆகவே அறை
வளமடல்53 ;
ஐவிருத்தம் வெள்ளைப்பாவினில் கைக்கிளை54க்கு
அறை ஒருதலைக் காமமே.
ஒருபா
ஒருபஃது, இருபா இருபஃது, ஆற்றுப்படை,
புறனிலை
‘கலித்துறையினாலும் நேர்வெண்பாவினால் அ
கவலாயினும் ஒவ்வொன்றினைக்
கணித்துஒன்று பப்பத்தின் அந்தாதியாகவே
கழறும் ஒருபா ஒருபஃது55 ;
ஒலி அகவல்பத்து வெண்பாப்பத்தும் அந்தாதி
உற்றதொடை இருபான் நினைந்து
ஓதும் இருபாஇருபஃது56 ஆகும்; அகவலால்
உயர்விறலி பாணர்கூத்தர்
பலபொருநர் இந்நால்வரில் ஒருவர் பரிசுஉதவு
பரிசினுக்கு ஏகுவாரைப்
பரிசுஉற்று வருவோர்கள் ஆற்றினிடையே கண்டு
பரிசுஉதவு தலைவன் கொடை
நிலைகீர்த்தி கொற்றமும் சாற்றல் ஆற்றுப்படை57 ;
நீவணங்கு தெய்வமே
நினைப்பாதுகாப்ப நின்வழிவழியும் மிகுவதாய்
நிகழ்த்தல்
புறனிலை
58 ஆகுமே.
|