பாட்டியல் - பிற்சேர்க்கை 4

493


68.  பிள்ளைக்கவி : 

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி,
சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றை முறையே அகவல் விருத்தத்தால்
பப்பத்தாகக்கூறுவது ஆண்பால் பிள்ளைக்கவி. இவ்வுறுப்பினுள் கடை
மூன்றுஒழித்துக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பவற்றைக்
கூட்டிமேற்சொல்லியவாறு கூறுவது பெண்பாற் பிள்ளைக்கவியாம். 

69.  புகழ்ச்சிமாலை : 

அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் மாதர்களது
சீர்மையைக் கூறுவது.

70.  புறநிலை :

நீ வணங்கும் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப நின் வழி வழி
மிகுவதாக எனக் கூறுவது.

71.  புறநிலை வாழ்த்து :

வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப் பழிதீர் செல்வமொடு ஒருகாலைக்கு
ஒருகால் சிறந்து பொலிவாய் என வெண்பா முதலும் ஆசிரியம்
இறுதியுமாகப்பாடுவது.

72.  பெயர் நேரிசை :

பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார நேரிசை வெண்பாவால்
 தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது.

73.  பெயரின்னிசை :

பாட்டுடைத்தலைவன் பெயரினைச் சார இன்னிசை வெண்பாவால்
தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது.