|
உலா, இன்பமடல் என்பன
|
| ‘குழமகனை அடையாளம் கலிவெண் பாவால் |
| |
கூறி,அவன் மறுகுஅணையக் காதல் கூர்ஏழ்
|
| எழில்பேதை, பதினொன்று பெதும்பை, பன்மூன்று |
| |
இயல்மங்கை, பத்தொன்பான் மடந்தை, ஐயைந்து
|
| அழகுஅரிவை, முப்பஃதுஓர் தெரிவை, நாற்பான் |
| |
ஆம்வயது பேரிளம்பெண் முதலாய் உள்ளோர்
|
| தொழஉலாப் போந்ததுஉலா; தலைவன் பேர்க்குத் |
| |
தொடைஎதுகை ஒன்றில்இன்ப மடலாய்ச் சொல்லே.’ |
| |
10 |
|
உலாமடல், அநுராகமாலை, தூது, எண்செய்யுள்
என்பன
|
| ‘சொன்னமா தரைக்கண்டு கனவில் சேர்ந்தோன் |
| |
துணிவன்மடல் என்றதுஉலா மடல்;பாங் கற்கே
|
| இன்னல்உரைத் திடுதல்அநு ராக மாலை; |
| |
இருதிணையை விடல்தூது ; இவ் வைந்தும் முற்பால்
|
| பன்னுபொருள் இடம்காலம் தொழில்முப் பான்நாற் |
| |
பான்எழுபான் தொண்ணுறு நூறால் வெண்பா
|
| மன்னுகலித் துறையாதல் புகலப் பேரான் |
| |
மாலையும்ஆம்; எண்ணாலும் மருவும் பேராம்.’ |
| |
11 |
|
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை |
மாலைகள், தானைமாலை, தாரகைமாலை என்பன.
|
| ‘மகிழ்நிரைகொள் வதுவெட்சி, கரந்தை மீட்டல், |
| |
மாற்றார்பால் செலல்வஞ்சி, ஊன்றல் காஞ்சி,
|
| பகர்மதிலைக் காக்குமது நொச்சி, சுற்றிப் |
| |
படைவளைத்தது உழிஞை,பொரல் தும்பை, வென்று
|
| புகழ்படைத்தல் வாகையது மாலை, பேரால் |
| |
போற்றுவது மாலையுமாப் புகல்வர்; தானை
|
| அகலம்உரைப் பதுதானை மாலை, தூசி |
| |
அணிவகுப்பில் தாரகைமா லையைச்சொல் ஆய்ந்தே.’ |
| |
12 |