1 ‘‘வேல்வடித்துக்
கொடுத்தல் கொல்லற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம்
முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே’’
2‘‘ஈன்ற
வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’’
3‘‘கெடுக
சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந்
தனனே
நெருந லுற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட்
டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென
விடுமே’’
|