முகப்பு |
ஓதலாந்தையார் |
12. பாலை |
எறும்பி அளையின் குறும் பல் சுனைய |
||
உலைக்கல் அன்ன பாறை ஏறி, |
||
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் |
||
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; |
||
அது மற்று அவலம் கொள்ளாது, |
||
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார் |
21. முல்லை |
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு, |
||
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் |
||
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் |
||
கானம், 'கார்' எனக் கூறினும், |
||
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. |
உரை | |
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு |
329. பாலை |
கான இருப்பை வேனில் வெண் பூ |
||
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
||
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
||
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
||
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
||
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
||
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |