முகப்பு |
மரா |
22. பாலை |
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, |
||
யாரோ பிரிகிற்பவரே?-சாரல் |
||
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து |
||
வேனில் அம் சினை கமழும் |
||
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே. |
உரை | |
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை |
87. குறிஞ்சி |
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் |
||
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும் |
||
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; |
||
பசைஇப் பசந்தன்று, நுதலே; |
||
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. |
உரை | |
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர் |
92. நெய்தல் |
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து- |
||
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை, |
||
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த |
||
பிள்ளை உள்வாய்ச் செரீஇய |
||
இரை கொண்டமையின், விரையுமால் செலவே. |
உரை | |
காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன் |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |