முகப்பு |
கரும்பு |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. |
உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
85. மருதம் |
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
||
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
||
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
||
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
||
நாறா வெண் பூ கொழுதும் |
||
யாணர் ஊரன் பாணன் வாயே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |
149. பாலை |
அளிதோ தானே-நாணே நம்மொடு |
||
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
||
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
||
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
||
தாங்கும் அளவைத் தாங்கி, |
||
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. |
உரை | |
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
267. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் |
||
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின் |
||
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன |
||
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் |
||
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய, |
||
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் |
||
உறல் முறை மரபின் கூற்றத்து |
||
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே. |
உரை | |
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார் |
384. மருதம் |
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
||
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
||
நலன் உண்டு துறத்தி ஆயின், |
||
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. |
உரை | |
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |