முகப்பு |
நெய்தல் |
9. நெய்தல் |
யாய் ஆகியளே மாஅயோளே- |
||
மடை மாண் செப்பில் தமிய வைகிய |
||
பெய்யாப் பூவின் மெய் சாயினளே; |
||
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் |
||
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் |
||
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
||
தண்ணம் துறைவன் கொடுமை |
||
நம் முன் நாணிக் கரப்பாடும்மே. |
உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார் |
227. நெய்தல் |
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி |
||
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த |
||
கூழை நெய்தலும் உடைத்து, இவண்- |
||
தேரோன் போகிய கானலானே. |
உரை | |
சிறைப்புறம். - ஓத ஞானி |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. |
உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
309. மருதம் |
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
||
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
||
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
||
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது' |
||
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
||
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
||
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
||
நின் இன்று அமைதல் வல்லாமாறே. |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |
336. குறிஞ்சி |
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
||
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
||
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
||
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
||
இருங் கழி நெய்தல் போல, |
||
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, |
உரை | |
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன் |
397. நெய்தல் |
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
||
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
||
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
||
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
||
'அன்னாய்!' என்னும் குழவி போல, |
||
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
||
நின் வரைப்பினள் என் தோழி; |
||
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. |
உரை | |
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
உரை | |
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் |
||