|
2
ஊர் அலர் உரைத்த காதை
|
|
|
||
|
[
ஊர் அலர் உரைத்த பாட்டு
]
|
|
|
||
|
நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் |
|
|
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த |
|
|
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் |
|
|
மணிமே கலையொடு மாதவி வாராத் |
|
5
|
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச் |
|
|
||
|
சித்திரா பதிதான் செல்லல்உற்று இரங்கித் |
|
|
தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி |
|
|
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப் |
|
|
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரைஎன, |
|
10
|
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு |
|
|
||
|
அயர்ந்துமெய் வாடிய அழிவினள் ஆதலின் |
|
|
மணிமே கலையொடு மாதவி இருந்த |
|
|
அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ |
|
|
ஆடிய சாயல் ஆயிழை மடந்தை |
|
15
|
வாடிய மேனி கண்டுஉளம் வருந்திப் |
|
|
||
|
பொன்நேர் அனையாய் புகுந்தது கேளாய் |
|
|
உன்னோடு இவ்வூர் உற்றதுஒன்று உண்டுகொல் |
உரை |
|
வேத்தியல் பொதுஇயல் என்றுஇரு திறத்துக் |
|
|
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் |
|
20
|
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் |
|
|
||
|
தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் |
|
|
கந்துகக் கருத்து மடைநூல் செய்தியும் |
|
|
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும் |
|
|
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும் |
|
25
|
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும் |
|
|
||
|
கட்டுரை வகையும் கரந்துஉறை கணக்கும் |
|
|
வட்டிகைச் செய்தியும் மலர்ஆய்ந்து தொடுத்தலும் |
|
|
கோலம் கோடலும் கோவையின் கோப்பும் |
|
|
காலக் கணிதமும் கலைகளின் துணிவும் |
|
30
|
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த |
|
|
||
|
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் |
|
|
கற்றுத் துறைபோகிய பொன்தொடி நங்கை |
|
|
நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே |
|
|
அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது |
|
35
|
பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி |
|
|
||
|
நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற |
|
|
வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்: |
உரை |
|
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் |
|
|
போதல் செய்யா உயிரொடு நின்றே |
|
40
|
பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து |
|
|
||
|
நல்தொடி நங்காய் நாணுத் துறந்தேன் |
உரை |
|
காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி |
|
|
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது |
|
|
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின் |
|
45
|
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்: |
|
|
||
|
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு |
|
|
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர் |
|
|
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து. |
|
|
அத்திறத் தாளும் அல்லள்எம் ஆயிழை |
உரை |
50
|
கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் |
|
|
||
|
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் |
|
|
கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை |
|
|
திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக் |
|
|
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய |
|
55
|
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை |
|
|
||
|
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் |
|
|
திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் |
உரை |
|
ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய் |
|
|
ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் |
|
60
|
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி |
|
|
||
|
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து |
|
|
மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக் |
|
|
காதலன் உற்ற கடுந்துயர் கூறப் |
|
|
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் |
|
65
|
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் |
|
|
||
|
பற்றின் வருவது முன்னது பின்னது |
|
|
அற்றோர் உறுவது அறிகென்று அருளி |
|
|
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி |
|
|
உய்வகை இவைகொள்என்று உரவோன் அருளினன் |
உரை |
70
|
மைத்தடங் கண்ணார் தமக்கும்என் பயந்த |
|
|
||
|
சித்திரா பதிக்கும் செப்பு நீஎன, |
|
|
ஆங்குஅவள் உரைகேட்டு் அரும்பெறல் மாமணி |
|
|
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று |
|
|
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் |
|
75
|
கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்துஎன். |
உரை |
|
||
|
ஊர்
அலர் உரைத்த முற்றிற்று.
|
|