|
26 வஞ்சி மாநகர் புக்க காதை |
|
|
||
|
[ மணிமேகலை கண்ணகிக்கோட்டம் அடைந்து |
|
|
வஞ்சிமாநகர் புக்க பாட்டு ] |
|
|
||
|
அணியிழை அந்தரம் ஆறா எழுந்து | |
|
தணியாக் காதல் தாய்கண் ணகியையும் | |
|
கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் | |
|
கடவுள் எழுதிய படிமம் காணிய | |
5
|
வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து | |
|
||
|
வணங்கி நின்று குணம்பல ஏத்தி | |
|
அற்புக்கடன் நில்லாது நல்தவம் படராது | |
|
கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது | |
|
அருளல் வேண்டும்என்று அழுதுமுன் நிற்ப | உரை |
10
|
ஒருபெரும் பத்தினிக் கடவுள்ஆங்கு உரைப்போள் | |
|
||
|
எம்இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது | |
|
வெம்மையின் மதுரை வெவ்வழல் படுநாள் | |
|
மதுரா பதிஎனும் மாபெருந் தெய்வம் | உரை |
|
இதுநீர் முன்செய் வினையின் பயனால் | |
15
|
காசுஇல் பூம்பொழில் கலிங்கநல் நாட்டுத் | |
|
||
|
தாய மன்னவர் வசுவும் குமரனும் | |
|
சிங்க புரமும் செழுநீர்க் கபிலையும் | |
|
அங்குஆள் கின்றோர் அடல்செரு உறுநாள | |
|
மூஇரு காவதம் முன்னுநர் இன்றி | |
20
|
யாவரும் வழங்கா இடத்தில் பொருள்வேட்டுப் | |
|
||
|
பல்கலன் கொண்டு பலர்அறி யாமல | |
|
எல்வளை யாளோடு அரிபுரம் எய்திப் | |
|
பண்டக் கலம்பகர் சங்கமன் தன்னைக் | |
|
கண்டனர் கூறத் தையல்நின் கணவன் | |
25
|
பார்த்திபன் றொழில்செயும் பரதன் என்னும் | |
|
||
|
தீத்தொழி லாளன் தெற்றெனப் பற்றி | |
|
ஒற்றன் இவன்என உரைத்து மன்னற்குக் | |
|
குற்றம்இ லோனைக் கொலைபுரிந் திட்டனன் | உரை |
|
ஆங்குஅவன் மனைவி அழுதனள் அரற்றி | |
30
|
ஏங்கிமெய் பெயர்ப்போள் இறுவரை ஏறி | |
|
||
|
இட்ட சாபம் கட்டியது ஆகும் | |
|
உம்மை வினைவந்து உருத்தல்ஒழி யாதுஎனும் | |
|
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் | |
|
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன் | உரை |
35
|
மேல்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் | |
|
||
|
அவ்வினை இறுதியின் அடுசினப் பாவம் | |
|
எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது | |
|
உம்பர் இல்வழி இம்பரில் பல்பிறப்பு | |
|
யாங்கணும் இருவினை உய்த்துஉமைப் போல | |
40
|
நீங்குஅரும் பிறவிக் கடலிடை நீந்திப் | |
|
||
|
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் | |
|
மறந்தும் மழைமறா மகதநல் நாட்டுக்கு | |
|
ஒருபெருந் திலகம்என்று உரவோர் உரைக்கும் | |
|
கரவுஅரும் பெருமைக் கபிலையம் பதியின் | |
45
|
அளப்புஅரும் பாரமிதை அளவின்று நிறைத்துத் | |
|
||
|
துளக்கம்இல் புத்த ஞாயிறு தோன்றிப் | |
|
போதி மூலம் பொருந்திவந் தருளித் | |
|
தீதுஅறு நால்வகை வாய்மையும் தெரிந்து | |
|
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் | |
50
|
அந்நிலை எல்லாம் அழிவுறு வகையும | |
|
||
|
இற்றுஎன இயம்பிக் குற்றவீடு எய்தி | |
|
எண்அரும் சக்கர வாளம் எங்கணும் | |
|
அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலைப் | உரை |
|
பைந்தொடி தந்தை யுடனே பகவன | |
55
|
இந்திர விகாரம் ஏழும்ஏத் துதலின் | |
|
||
|
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி | |
|
அன்புஉறு மனத்தோடு அவன்அறம் கேட்டுத் | |
|
துறவி உள்ளம் தோன்றித் தொடரும் | |
|
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் | உரை |
60
|
அத்திற மாயினும் அநேக காலம் | |
|
||
|
எத்திறத் தார்க்கும் இருத்தியும் செய்குவம். | உரை |
|
நறைகமழ் கூந்தல் நங்கை நீயும் | |
|
முறைமையின் இந்த மூதூர் அகத்தே | |
|
அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு | |
65
|
மெய்வகை இன்மை நினக்கே விளங்கிய | |
|
||
|
பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய் | |
|
இன்னதுஇவ்வி யல்புஎனத் தாய்எடுத்து உரைத்தலும், | உரை |
|
இளையள் வளையோள் என்றுஉனக்கு யாவரும் | |
|
விளைபொருள் உரையார் வேற்றுஉருக் கொள்கென | |
70
|
மைஅறு சிறப்பின் தெய்வதம் தந்த | |
|
||
|
மந்திரம் ஓதிஓர் மாதவன் வடிவாய்த் | |
|
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் | |
|
பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து | |
|
நல்தவ முனிவரும் கற்றுஅடங் கினரும் | |
75
|
நல்நெறி காணிய தொல்நூல் புலவரும் | |
|
||
|
எங்கணும் விளங்கிய எயில்புற இருக்கையில், | உரை |
|
செங்குட் டுவன்எனும் செங்கோல் வேந்தன் | உரை |
|
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் | |
|
போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய | |
80
|
நிலநாடு எல்லைதன் மலைநாடு என்னக் | |
|
||
|
கைம்மலைக் களிற்றுஇனம் தம்முள் மயங்கத் | |
|
தேரும் மாவும் செறிகழல் மறவரும் | |
|
கார்மயங்கு கடலின் கலிகொளக் கடைஇக் | |
|
கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி | |
85
|
வங்க நாவியின் அதன்வடக்கு இழிந்து | |
|
||
|
கனக விசயர் முதல்பல வேந்தர் | |
|
அனைவரை வென்றுஅவர் அம்பொன் முடிமிசைச் | |
|
சிமையம் ஓங்கிய இமைய மால்வரைத் | |
|
தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் | |
90
|
செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் | உரை |
|
||
|
வில்திறல் வெய்யோன் தன்புகழ் விளங்கப் | உரை |
|
பொன்கொடிப் பெயர்ப்படூஉம்
பொன்நகர்ப் பொலிந்தனள்
|
|
|
திருந்துநல் ஏது முதிர்ந்துளது ஆதலின் | |
|
பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்குஎன். | உரை |
|
||
|
வஞ்சி மாநகர் புக்க காதை முற்றிற்று.
|
|
மேல் |