என வருவன அக்கோமகனின் மொழிகளாம்.
இம்மன்னன் மகளாகிய சுயம்பிரபையின் நுண்ணறிவினைக் காட்டும்
சொல்லாட்டம்
ஒன்றனைக் காண்போம். சடிமன்னன் சுயம்பிரபையை விமானத்தில்
அழைத்துக்கொண்டு
தன் சுற்றமும் பரிவாரமும் சூழப் போதன நகரத்திற்கு
வந்து அந்நகரப் புறத்தில் தமக்கென
அமைத்துள்ள மாளிகையின்கண் தங்கியிருக்கின்றனன்.
அப்பொழுது திவிட்டனின் நற்யாகிய சசிதேவி சுயம்பிரபையைப் பார்த்து
வரும்படி மாதவசேனை என்னும் தோழியை
விடுத்தனள். அவளும் மங்கலப்
பொருள்களோடே சுயம்பிரபையின் மாளிகையை யடைந்து
அவளது பேரழகினைக்
கண்டு |