"....நெல்வாயின், முத்தின் சிவிகை முதல்கொண்டும்......"
 

- ஆளு. பிள். - உலாமாலை.

 
"........பைந்தரள நன்சிவிகை"
 

- ஆளு. பிள். திருக்கலம்பகம் - 9

 
".......ஞாலத்து
முத்தின் சிவிகை யரன்கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான்........"
 

- மேற்படி திருத்தொகை.

  5. முயலகனோய் தீர்த்தது - (திருப்பாச்சிலாச்சிராமம்)
  1ம் திருமுறை :- பிள்ளையார் தேவாரம்
 
".....பாச்சிலாச் சிராமத் துறைகின்ற, மணிவளர் கண்டரோ
மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே"
 

- தக்கராகம் - (பதிக முழுதும் மகுடம்)

  11-ம் திருமுறை :- நம்பியாண்டார் நம்பி
 
"* * * வள்ளல்
மழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன்..........."
 

- ஆளு. பிள். - திருத்தொகை.

  6. பனிநோய் தீர்த்தது - (திருக்கொடிமாடச் செங்குன்றூர்)
  1-ம் திருமுறை :- பிள்ளையார்
 
"* * * நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்"
 

- வியாழக் குறிஞ்சி - திருநீலகண்டம் (பதிக முழுதும் மகுடம்)

  11-ம் திருமுறை :- நம்பியாண்டார் நம்பி
 
"மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தோர்மேற் புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு காசனி நல்கிடவே"
 

- ஆளு. பிள். - திருவந்தாதி - 86

 
"* * * தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் ப்ரிசனத்தைத் தீர்ப்பித்தும் ......."
 

- மேற்படி திருவுலா மாலை

  குறிப்பு :- புராணத்துள் இத் திருவாக்குக்களையே விரித்து ஆசிரியர் காட்டிப் போந்தருளியமை காண்க.
  7. முத்துப் பந்தர் பெற்றது - (திருப்பட்டீச்சுரம்)
  4-ம் திருமுறை :- பிள்ளையார்
 
"எரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசை"
 

- சாதாரி - பட்டீச்சுரம் - 1

  என்ற திருப்பதிகத்தின் சொல்லாற்றற் குறிப்புக் காண்க.
  8. உலவாக்கிழி பெற்றது - (திருவாவடுதுறை)
  3-ம் திருமுறை :- பிள்ளையார்
 
"* * * இதுவோ வெமை யாளுமா நீவதொன்றெமக் கில்லையேல்,
அதுவோ வுன தின்னருள்......."
 

காந்தார பஞ்சமம் - நாலடி மேல்வைப்பு - திரு
ஆவடுதுறை - பதிக முழுதும் மகுடம்)