|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழால்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின் மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே" |
|
|
- ஆளு. பிள். - திருவந்தாதி - 80 |
|
".....அவனியிடர் முழுதுபோ யகல,
வயலணிதென் வீழிமிழ லையினிலவு காசின்மலி
மழைபொழிபு மானகுண மதுரன்........" |
|
|
- ஆளு. பிள். - கலம்பகம் - 24 |
|
"....வீழிமிழலைப் படிக்காசு கொண்டபிரான்" |
|
|
- மேற்படி - திருத்தொகை. |
|
11. மறைக்கதவம் அடைத்தது - (திருமறைக்காடு) |
|
2-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"........மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க வெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொளுங்கருத் தாலே" |
|
|
- இந்தளம் - 1 |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"அடைத்தது மாமறைக் காடர்தங் கோயிற் கதவினை" |
|
|
- ஆளு. பிள். - திருவந்தாதி - 91 |
|
".........அடைத்தது
அரைசோ டிசையா வணிமறைக் காட்டுக்
குரைசேர் குடுமிக் கொழுமணிக்கோ யிற்கதவே......" |
|
|
- மேற்படி - மும்மணிக்கோவை - 4 |
|
"..... இருங்கதவந் தானடைத்தும்....." |
|
|
- மேற்படி - திருவுலா மாலை |
|
".......நித்திலங்கண்
மாடத் தொளிரு மறைக்காட் டிறைகதவைப்
பாடி யடைப்பித்த பண்புடை யான்......." |
|
|
- மேற்படி - திருத்தொகை |
|
12. பாண்டியன் சுரநோய் தீர்த்ததும் சுரவாதம் வென்றதும் |
|
1. வாதம் நிகழும்; அதில் திருநீறே வெற்றி தரும்; சமணர் அழிவுபெறுவர்; என்றது. |
|
2-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"புத்ததொ டமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க்கு மிகவே" |
|
|
- பொது - பியந்தைக் காந்தாரம் - 10 |
|
குறிப்பு :- இது பாண்டி நாட்டுக்குப் புறப்படு முன்பே திருமறைக் காட்டில் பிள்ளையார்
அருளியது. |
|
2. பிள்ளையாரது திருமடத்தில் சமணர்கள் தீயிட்டதும்,
அவ்வெப்பு அரசனைச் சாரப் பிள்ளையார்
அருளியதும். |