|
3-ம் திருமுறை:- பிள்ளையார் தேவாரம் |
|
"ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே" (1)
"அமணர் கொளுவும் சுடர்
- தென்னன் பாண்டியற் காகவே" |
|
|
என்று பதிக முழுதும் வரும் மகுடமும் காண்க. |
|
"....ஆலவா யாதி யருளினால்
வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரை......" (11)
என்ற திருக்டைக்காப்பும் காண்க. |
|
|
- கௌசிகம் - ஆலவாய் |
|
3. வாது செயத் திருவுள்ளங் கேட்டறிந்தது. |
|
3-ம் திருமுறை:- |
|
"காட்டு மாவுதி" (பண்-கௌசிகம்) என்ற பதிக முழுமையும்;
"வேதவேள்வியை" (பண்-பழம்பஞ்சுரம்) என்ற பதிக முழுமையும். |
|
|
4. சுரவாதம் நிகழ்ந்ததும், அதில் பாண்டியன் சுரம் தீர்த்ததும், அமணர் தோல்வியுற்றதும்(திருவாலவாய்) |
|
2-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"குண்டிகைக் கையர்க ளோடு(சாக்கியர் கூட்டமும் கூடக்)
கண்திகைப் பிப்பது நீறு" (10)
"தேற்றித் தென்னனுட லுள்ள தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள்......." (11) |
|
|
- காந்தாரம் - திருவாலவாய் - திருநீற்றுப் பதிகம். |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பி |
|
"காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் றுயர்தவிர்த் தானை...." |
|
|
- ஆளு.பிள். - திருவந்தாதி - 71 |
|
"பத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடுங்
கொற்றக் கதிர்வேற் குலச்சிறையுங் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப்
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை யென்னவல்லான்" |
|
|
- மேற்படி - திருத்தொகை |
|
5. அனல் வாதம் (திருவாலவாய்) |
|
3-ம் திருமுறை:- |
|
".....நள் ளாறர்த நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே" (1)
என்ற பதிக முழுமையும் மகுடமும்,
"கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபதும்........" எனற் திருக்கடைக்காப்பும். |
|
|
- பண் - சாதாரி - திருநள்ளாறு - திருவிராகம். |
|
1-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
".......நள்ளா றுடைய நம்பெரு மானிது வென்கொல்
சொல்லாய்.......
கூடல் ஆல வாயின்க ணமர்ந்தவாறே....."
பதிக முழுமையும் திருக்கடைக்காப்பும். |
|
|
- நட்டபாடை - திருநள்ளாறுந் திருவாலவாயும். |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"......எரிவா யிடும்பதிகம்
ஆழி யுலகத் தழியாமற் காட்டினான்......" |
|
|
- ஆளு. பிள். - திருத்தொகை |