ஒளிப்புலன் ஞாயிறு xi
தமிழகத்தை அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆட்கொண்டுள்ளன. இவ்விருள்சேர் இருநிலையும் ஒருசேரப் பெருகிக் கிடக்கும் இந் நாட்டில், போலிமையும், புன்மையுமே தலைதூக்கி நிற்கின்றன; அதிகாரம் பெறுகின்றன. எனவே உண்மை வலிவற்றுப் போகின்றது. இந் நிலையில் பாவாணரைப் போன்ற பேரறிஞர்களை நாடு இனம் கண்டுகொள்வது குதிரைக் கொம்பே!

தமிழகத்தின் தவக்குறை என்று நாம் எல்லோருமே சொல்லிக் கொள்கின்ற அறிஞரைப் பேணாத குறை தமிழ்நாட்டு மண்ணிலோ, மரங்களிலோ விளைவதன்று, அப்படிச் சொல்லியே தப்பித்துக் கொள்ளும் நம் ஒவ்வொருவருடைய மனத்திலும் விளைவதுதான். அது வெறும் குறையாக மட்டும் நின்றுவிடவில்லை. தமிழக வரலாற்றிலேயே என்றைக்கும் துடைத்தெறியப்படாத கறையாகவே படர்ந்திருக்கின்றது. இதனை நம்மில் எல்லோரும் திருப்பித் திருப்பி ஒருவர் முகத்தில், ஒருவர் பூசிக் கொள்ளுகின்றோமேயன்றி, இதனைப் போக்குகின்ற முயற்சியை நம்மில் எவரும், எக்காலத்திலும் இன்றுவரை செய்யவில்லை. காரணம் நமக்கு இருக்கும் பகட்டான பேச்சுத்தான்; பார்ப்போரை மயங்க வைக்கும் நடிப்புத்தான்; நமக்கு ஏற்பட்ட அரசியல் திளைப்புத்தான்; அறிவை அறிந்துகொள்ள மறுக்கின்ற அறியாமைச் செருக்குத்தான்; மொத்தத்தில் நம் உடலில் ஊறிக்கிடக்கும் இருண்ட வாழ்க்கையின் ஈடுபாடுதான். இந்நிலைகள் இந்தத் தலைமுறையிலிருந்து தமிழக மண்ணில் அறிஞர்களே தோன்றமாட்டார்கள் என்பது திருக்குறள் போன்ற உண்மை; தொல்காப்பியம் போன்ற உறுதி; பாவேந்தர் பாடல்கள் போன்ற தெளிவு!

தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்காரர்களும், குமுகாயச் சீர்திருத்தக்காரர்களும் எத்தனையோ காரணங்களைத் தம்தம் வரலாற்று அறிவிற் கேற்பக் கூறினாலும், உண்மையான காரணங்கள் இரண்டு. ஒன்று தமிழனின் குமுகாயச் சரிவு; இரண்டு தமிழனின் மொழிச்சரிவு. இவ்விரண்டு சரிவுகளும் ஆரியர்கள் என்று இத் தமிழக மண்ணில் காலடி வைத்தனரோ அன்றே தொடங்கின. இச் சரிவுக்குத் தடுப்புச்சுவர் கட்டக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழன் முயன்றான். ஆனால், ஆரியத்தால் ஏற்பட்ட சரிவை ஆரியத்தைக்கொண்டே சரிசெய்ய முயன்றதால் தோல்வியே கண்டான். இந்த இரண்டு சரிவுகளுக்கும் இந் நாட்டில் உள்ள சமயங்களே மண்வெட்டிகளாகப் பயன்பட்டன. முதற்சரிவைக் கண்டுகாட்டியவர் பெரியார் ஈ.வே.ரா. இரண்டாம் சரிவைக் கண்டுகாட்டியவர் மறைமறையடிகளார்.

பெரியார் ஈ.வே.ரா.வின் குமுகாய முயற்சி மலையத்துணை என்றாலும், அதனால் இதுவரை ஏற்பட்டிருக்கின்ற பயன் ஒரு குன்றத்துணையே! அடிகளாரின் மொழிமுயற்சி கடலத்துணை என்றாலும், அதனால் ஏற்பட்ட பயன் ஒரு கால்வாய் அத்துணையே.
பெரியாரின் குமுகாயப் போராட்டம் புறந்தெரிவது; அடிகளாரின் மொழியியல் போராட்டம் அகம் ஒடுங்கியது.அடிகளாருக்குப்பின்இப்போராட்டம்