இளவழகன், கோவிந்தசாமி - அமிர்தம் அம்மையாருக்கு மூத்த
மகனாக 2.9.1946-ல் பிறந்தார்; தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி இரண்டையும்
உறந்தைராயன்குடிக்காட்டிலேயே பயின்றார்; தொடக்கம் முதலே தமிழில் ஆர்வம்
உடையவர்; 1965-ல் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் பங்குகொண்டு சிறை சென்றவர்;
தமிழ்நாட்டரசால் ‘தமிழ்மொழி காவலர்‘ விருதளிக்கப் பெற்றவர்; பாவாணருடன்
நெருங்கிய தொடர்புகொண்டவர்; ‘பாவாணர் அச்சகம்‘ என்னும் பெயரில் அச்சகம்
நிறுவியவர். ‘கிழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை‘ தொடங்கி அதன்
சார்பில் பல நற்பணி செய்து வருபவர். |