xxx |
தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
|
நெல்லி - திருநெல்லிக்கா, நெல்லித்தோப்பு
ஆல் - திருவாலங்காடு
பூல் - பூலாங்குறிச்சி |
குமரி என்பது ஒரு மூலிகைச் செடி. இதனைச் சோற்றுக்கற்றாழை என்று நாட்டுப்புற
மக்கள் வழங்குவர். குமரிச்செடி மிகுந்திருந்த காரணத்தினால் குமரிக்கண்டம் எனப்
பெயர் வழங்குவதாயிற்று. |
|
மூலிகை என்பதன் கடைக்குறை மூலி,
இலை + மூலிகை - இலைமூலிகை
இலைமூலி - இலைமூரி - இலெமூரி
ஒ.நோ : குடல் - குடர், பந்தல் - பந்தர், திடல் - திடர், கூதல் - கூதர்,
சாம்பல் - சாம்பர், இலுப்பை - இருப்பை, போக்கிலி - போக்கிரி |
இலெமூர் என்னும் குரக்கினம் வாழ்ந்ததனால்,
இலெமூரியா என வழங்கிற்று என்பதனைவிட இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமூரியா
எனக் குமரிக்கண்டம் வழங்கப்பட்டது என்பது சாலப் பொருந்து. |
மொழித்தோற்றம் |
எங்கு முதன் மாந்தன் தோன்றினானோ அங்குத்தான் ஞால முதுன்மொழியும் தோன்றியிருக்க
முடியும். குமரி மாந்தன் முதன் மாந்தன். அவன் பேசிய மொழியே முதன்மொழி.
அதுவே, நந்தம் தாய்மொழியாம் தமிழ். இது பாவாணரின் அசைக்கமுடியாத கருத்து. |
இயல்பாகத் தோன்றிய இயன்மொழிக்குப் பதினாறு பண்புகள் இருக்க வேண்டும்.
அப் பதினாறும் அமைந்த மொழி தமிழ் ஒன்றுமட்டுமே. |
|
தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஒண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப்
பன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே. |
மொழி எண்ணத்தைப் புலப்படுத்தும் கருவி. |
முதல் மாந்தனுக்கு மொழி தேவையில்லை. அவன் மக்களைப் பெற்றுப் பெருகிய
பின்னர்க் கூடிவாழத் தலைப்பட்டான்; தன் எண்ணத்தைக் கைக்குறியாலும் முகக்குறியாலும்
படக்குறியாலும் பிறர்க்குப் புலப்படுத்தினான். இக் குறிகள் இரவிலும் தொலைவிலும்
பயன்படுத்த முடியாததனால் அதன் பின்னரே மொழி தோன்றிற்று. |
"வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக்
கையி னாலுரை காலம் இரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்" |
|
என்பார் தஞ்சைப் பெரும்புலவர் நீ.கந்தசாமிப்பிள்ளை. |