பக்கம் எண் :
 
20சிதம்பரப்பாட்டியல்

“பொன்னார  மார்பில்”இது மலரெனமுடிந்தது. அடைவே காசு பிறப்பு
நாண் மலரெனவும் ஈற்றடிமுச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க.

இனி ‘பாலொடுதேன்’ எனவும், ‘உருவுகண்டெள்ளாமை’எனவும்,  ஒரு
விகற்பத்தானும் இருவிகற்பத்தானும் வந்தமையாற் குறள்வெண்பா.

“தடமண்டு தாமரையின் றாதா டலவ
னிடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்
தூழி நடாயினா னூர்”
எனவும்,

“அரிய வரைசீண்டு காட்டுவார் யாரே
பெரிய வரைவயிரங் கொண்டு-தெரியிற்
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
பெரிய வரைவயிரங் கொண்டு”
எனவும்,

இவை   இரண்டு குறள் வெண்பா நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச்
சொல்லாலடிநிரம்பி   இரண்டு   விகற்பத்தானு   மொருவிகற்பத்தானும்
வந்தமையால் இருகுறள் நேரிசைவெண்பா.

“கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா-வொருநிலையே
முட்டின்று மூன்று முடியுமே லஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்”
எனவும்,

“வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன்
வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ”
எனவும்,

ஓரசையானும்         ஈரசையானும்    ஆசிட்டு   இருவிகற்பத்தானும்
ஒருவிகற்பத்தானும்   வந்த   இருகுறணேரிசை   வெண்பா  வந்தவாறு
கண்டுகொள்க. இனி:-

“வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாணாண்மேன் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.”

இது,   நான்கடியாய்த்   தனிச்சொல்லின்றி  யொருவிகற்பத்தால்  வந்த
இன்னிசைவெண்பா.

“இன்னாமை வேண்டி னிரவெழுக விந்நிலத்து
மன்னுதல் வேண்டி னிசைநடுக தன்னொடு