“ஆசிலிசை துள்ளலளவடி கலிப்பா” எ-து, துள்ளலோசையினையு மளவடியினையு முடையது கலிப்பா; “தரவொன்றடைவிற்றாழிசைமூன்றுந் தனிச்சொல்சுரிதகமா மாசிலநேரிசையொத்தாழிசைக்கலிப்பா” எ-து, தரவொன்றும் தாழிசைமூன்றுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமுமாய் வருவது நேரிசை யொத்தாழிசைக்கலிப்பா; “அளவே மன்சிந்து குறளடித்தாழிசைப் பின்பு வருமேல் ஏசில் அம்போதரங்க வொத்தாழிசைக்கலிப்பா” எ-து, முன்போலத்தரவுந் தாழிசையும், பின்பு நாற்சீரடியானு முச்சீரடியானும் இருசீரடியானும் வந்து அம்போதரங்கமு முடைத்தாய்த் தனிச்சொல்லுஞ்சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்கவொத்தாழிசைத்தாழிசைக்கலிப்பா: “இவற்றோடிடைஅராகம் வரில் வண்ணகவொத்தாழிசையே”என்பது,இந்த அம்போதரங்க வுறுப்பையுமுடைத்தாய்த்தாழிசைக்குமம்போதரங்கத்துக்கு மிடையே அராகவுறுப்பைப் பெற்றுவருவது வண்ணக வொத்தாழிசைக்கலிப்பா. “பேசியவெண்பாவியைந்து சிந்தடியீற்றடியாய்ப் பிறதளை தன் றளையோசை பெறுவது வெண்கலிப்பா” என்பது, வெண்பாவினடைத்தாயீற்றடிசிந்தடியாய்த் தன்றளையாகிய கலித்தளையையும் பிறதளையையும் பெற்றுக்கலி யோசையினையுடைத்தாய் வருவது வெண்கலிப்பா:-இவற்றிற்குதாரணம் “வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணொ டுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ” இது தரவு. சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வெண்பவாற் பீருடைய நலந்தொலையப் பிரிவரோ பெரியவரே. |