நிரைநிரைநேர்நேர் கருவிளந்தண்பூ, நேர்நிரைநேர்நேர் கூவிளந்தண்பூ எனவும்; நேர்நேர்நிரைநேர் தேமாநறும்பூ, நிரைநேர்நிரைநேர் புளிமாநறும்பூ, நிரைநிரைநிரைநேர் கருவிளநறும்பூ, நேர்நிரைநிரைநேர் கூவிளநறும்பூ எனவும், நேர்நேர்நிரைநிரை தேமாநறுநிழல், நிரைநேர்நிரைநிரை புளிமாநறுநிழல், நிரைநிரைநிரைநிரை கருவிளநறுநிழல்; நேர்நிரைநிரைநிரை கூவிளநறுநிழல் எனவும் வரும்: இவை பொதுச்சீர். நாண் மலர் என்பன ஓரசைச்சீர். இவற்றிற்கு உதாரணம்:- “குன்றக் குறவன் காதன் மடமகள் வரையா மகளிர் புரையுஞ் சாயலள் ஐய ளரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே” இவ்வாசிரியப்பாவினுள் நான்காசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. “பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்.” இவ்வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டுகொள்க. “சுறமறிவன துறையெல்லாம் இறவீன்பன வில்லெல்லாம் மீன்றிரிவன கிடங்கெல்லாம் தேன்றாழ்வன பொழிலெல்லாம் எனவாங்கு: தண்பணை தழீஇய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.” இவ்வஞ்சிப்பாவினுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டுகொள்க. “அங்கண்வானத் தமரரசரும் வெங்களியானை வேல்வேந்தரும் வடிவார்கூந்தன் மங்கையரும் கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச் சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக் கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையு முக்குடை நீழல் |