வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப வனந்தசதுட்டய மவையெய்த நனந்தலையுலகுட னவைநீங்க மந்தமாருத மருங்கசைப்ப அந்தரதுந்துபி நின்றியம்ப இலங்குசாமரை யெழுந்தலமர நலங்கிளர்பூமழை நனிசொரிதர இனிதிருந், தருணெறி நடாத்திய வாதிதன் திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.” இக்குறளடி வஞ்சிப்பாவினுள் பொதுச்சீர் பதினாறும் அடிதோறும் வந்தவாறு கண்டுகொள்க. “நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர்” இவ்வெண்பாவினுள ‘இலர்’ என நிரையசைச்சீராயினவாறு கண்டுகொள்க. “பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி வாலெயி றூறிய நீர்” இவ்வெண்பாவினுள் ‘நீர்’ என நேரசைச் சீராயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. இனி, ஓரசைச்சீருக்குத் தளைவருமாறு:- “உரிமை யின்க ணின்மையால் அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால் பெருமை கொன்ற வென்பவே” இம்முச்சீரடி வஞ்சிவிருத்தத்துள் ‘மழை’ ‘செய்’ என்னும் அசைச்சீர்கள் இயற்சீரேபோலக்கொண்டு, வருஞ்சீர் முதலசையோடொன்றாமலும் ஒன்றியும் வந்தமையால், முறையே இயற்சீர்வெண்டளையும் ஆசிரியத்தளையுமாயின. (2) |