பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்9

கருதுகனி முன்னர்நே ரொன்றாத வஞ்சி
   கனிமுனிரை யொன்றியவஞ் சித்தளையா மாமுன்
னிரையும்விள முன்னேரு மியற்சீர்வெண் டளையாம்
   நிழல்கனியாம் பூக்காயா நிகழ்பொதுச்சீர்த் தளைக்கே.

 

என்பது-விளமென     நிற்ப நிரையெனவருவது நிரையொன்றாசிரியத்
தளை;   மாவெனநிற்ப   நேரென   வருவது   நேரொன்றாசிரியத்தளை;
காயெனநிற்ப  நேரெனவருவது  வெண்சீர்  வெண்டளை;   காயெனநிற்ப
நிரையென   வருவது  கலித்தளை;  கனியென  நிற்ப   நேரெனவருவது
ஒன்றாதவஞ்சித்தளை;        கனியெனநிற்ப        நிரையெனவருவது
ஒன்றியவஞ்சித்தளை; மாவெனநிற்ப  நிரையெனவருவதும் விளமெனநிற்ப
நேரெனவருவதும் இயற்சீர் வெண்டளை   எனவரும்; தண்ணிழற்சீருக்கும்
நறுநிழற்சீருக்கும்         கனிச்சீருக்குரைத்தாங்குத்      தளைகொள்க;
தண்பூச்சீருக்கும்  நறும்பூச்சிருக்கும்    காய்ச்சீருக்கு  உரைத்த தளையே
கொள்க. இவற்றுக்குதாரணம்:-

“திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப்
பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே.”

இது  நிரையொன்றாசிரியத்தளையும்  நேரொன்றாசிரியத்தளையும்   வந்த
செய்யுள்.  “பொன்னாரமார்பின்”  -   இது  வெண்சீர்  வெண்டளையும்
இயற்சீர்வெண்டளையும்        வந்தசெய்யுள்.        “செல்வப்போர்க்
கதக்கண்ணன்”-இது   கலித்தளையான்    வந்த  செய்யுள்.  “சுறமறிவன
துறையெல்லாம்”-        இஃது        ஒன்றிய      வஞ்சித்தளையும்
ஒன்றாதவஞ்சித்தளையும்   வந்த  செய்யுள்.  நாலசைப் பொதுச்சீருக்குத்
தளை  முன்னர்க்காட்டிய  ‘அங்கண்வானத்து’ என்னும் வஞ்சிப்பாவினுட்
கண்டுகொள்க.                                             (3)
 

4.

நிகழிருசீர் குறளடிமுச் சீர்சிந்து நாற்சீர்
   நேரொடள வடியைஞ்சீர் நெடிலடியா றாதி
திகழ்தருசீர் கழிநெடில்வெள் ளடியிரண்டு மூன்றா
   சிரியம்வஞ்சி மூன்றுகலி நான்கிழிபு பெருமை
யகல்பொருண்மட் டெழுத்தசைசீ ரடியந்த மாதி
   யாமந்தா தித்தொடையே யடிமுழுது மொருசொற்
புகல்வதிரட் டைத்தொடையா மோனைமுத லாகப்
   புகன்றதொடை புகலாது புகல்வதுசெந்தொடையே.