பக்கம் எண் :
 

10நவநீதப் பாட்டியல்

என்னும் ஆறெழுத்தும் க்ஷத்திரியருக்கு உரியன. இவர்களுக்குப் பிரபந்தம்
பாடுமிடத்து முதற்சீர்க்கண் இந்த எழுத்து வைக்க. இவர்களுக்குத் தேவதை
இந்திரன், சூரியன், சந்திரனும் காக்கவென்று பாடுக. ல, வ, ற, ன என்னும்
நாலெழுத்தும் வைசியர்க்கு உரியன. இவர் மேற் பிரபந்த முதற் சீர்க்கு இந்த
எழுத்து வைத்துப் பாடுக. இவர்களுக்குத் தேவதை குபேரனும் யமராசனும்
காக்கவென்று பாடுக. ழ, ள என்னும் இந்த இரண்டெழுத்தும் வேளாளர்க்கு
உரியன. இவர்களுக்குத் தேவதை வருணன் காக்கவென்று பாடுக.

     (கு - ரை). காலையன் - பகலைச் செய்யும் சூரியன்; “காலை சூழ்
செங்கதிர்” (தக்க. 279). கண்டன - படைத்த எழுத்துக்கள். விலக்கல்ல
என்பதை, காவலர்க்கு முதலிய நான்கனொடும் கூட்டிக்கொள்க. மாலையன் -
மாலயன்; மாலும் அயனும்; எதுகை நோக்கி ஐகார மாயிற்று. நிதிசால் ஐயன்
- நிதிகள் நிரம்பிய தலைவன்; குபேரன். வேலையன் - கடலுக்குத்
தலைவனாகிய வருணன். (12)

     (பி - ம்.) 1 ‘வெள்ளாளருக்கு’ 2 ‘விலக்கில்லையே’

நாட்களுக்குரிய எழுத்துக்கள்
   
13. அகர முதனான்கும் கார்த்திகை மற்றவற் றின்னடைவே
உகர முதலைந்தும் 1பூராட மாமென ஓதுவர்காண்
ஒகர முதன்மூன்று மோருத்தி ராட முயிர்மெய்யினில்
ககர முதனான்கு மோணமென் றோதுவர் கற்றவரே.

     (உரை - I).
எ-ன், மொழிதரு முதலெழுத்துக்கு உதாரணம் ஆமாறு
உணர்த்............று.

     அ, ஆ, இ, ஈ இவை நான்கும் கார்த்திகை; உ, ஊ, எ, ஏ, ஐ, இவை
ஐந்தும் பூராடம்; ஒ, ஓ, ஒள இவை மூன்றும் உத்திராட மெனக்கொள்க.
க, கா, கி, கீ இவை நான்கும் திருவோணம் எ - று.

     (உரை II). எ - து, நாட் பொருத்தமாமாறுணர்த்துகின்றது.

     (பி - ம்.). 1‘பூராட முத்திரா டம்மொழிந்த, ஒகர முதன் மூன்று
மேய்ந்த உயிரி லுயிர்மெய்யினில்’ (13)