குற்றெழுத்துக்களில்
ஒகரத்தையும், நெட்டெழுத்துக்களில் ஐ, ஓ, ஓள
என்னுமவற்றையும் ஒழிந்தன வேண்டப்பட்ட வென்க.
ஐகார முதல் நான்குயிரும் ஆண்டு ஆடூஉ மகடூஉ (சூ. 7)
என்று
ஈண்டு விலக்கியதாற் சிறப்பின்றேனும் சிறுபான்மையும் வரப்பெறுமென்பதாம்.
வல்லினம் மெல்லினம் ஈறின்றி என்றது உயிர்மெய்யெனக் கொள்க.
(உரை II).
எ - ன், .............இவ்வாறு அறிந்து தேவதையைப் பாடும்
பிரபந்தத்துக்குத் தேவ கதியும் மனிதரைப் பாடும் பிரபந்தத்துக்கு மக்கட்கதி
எழுத்தும் வைத்துப் பாடுக.
(பி - ம்.)
1 னான்கினுக்குச் 2 சொல்லுவர் (20)
|
இதுவுமது
|
|
|
21.
|
பன்னொன்று
பத்துயிர் யம்முதன் மூன்றுபன்
னேழ்பதினைந்
தென்னு மவையே விலங்கின் கதியியம் பாவெழுத்துத்
தன்னை நரக கதியென்று சாற்றுவர் தாமுணர்ந்தோர்
1முன்னை மொழிக்கண் வரத்தகா வென்று மொழிவர்களே. |
(உரை
I). எ - ன், விலங்கின் கதியும் நரககதியும் ஆமாறுணர்த்........று.
(இ - ள்).
பன்னொன்று பத்துமாகிய உயிரான ஓவும் ஒவ்வும், யம்
முதல் மூன்றாகிய யரலவும், பதினேழ் பதினைந்தாகிய றவ்வும் ழவ்வும்
இன்னவே விலங்கின் கதியாம். இயம்பாவெழுத்துத் தன்னை நரக கதியென்று
சாற்றுவர் என்பது, ஐ, ஒள, ஃ, வ, ள, ன என்னும் ஆறெழுத்தும் நரக
கதியாம். இவை முதன்மொழிக்கண் வரத்தகா எ - று.
அவ்வாறும் நரககதி, வேண்டிற்றில்லை. பயனின்மை
பொருளாமென்று
சொன்னாரெனக் கொள்க.
(உரை II).
....................மெய் பதினெட்டும் ஆய்தமும் ஆகப்
பத்தொன்பதெழுத்தும் நரக கதி என்று சொல்லப்படும். இந்த விலங்கின் கதி
எழுத்தும் நரககதி எழுத்தும் பிரபந்தச் சாயையில் முதற்சீர்க்கண்
வைத்தலாகாது. வைப்பின் குற்றமாம்.
|