பக்கம் எண் :
 

32நவநீதப் பாட்டியல்

     (கு - ரை.) பல்சந்த மாலை பத்துமுதல் நூறு கவிகளால் ஆனது;
அதில் பத்துச் சந்தங்கள் பயின்று வரும்; ‘பத்துக் கொருசந்தம் படிப்பா
நூறாக, வைத்தல்தான் பல்சந்த மாலையாம்’ (பிரபந்தத் க. 5) ‘பத்துச்
செய்யுளில் ஒவ்வொரு சந்தமாய் ஒரு நூறுரைத்தலே’ (பிரபந்ததீ. 28).
பத்துமுதல் நூறுசெய்யுள் வரை பாடப்படுவது என்று சிதம்பரப் பாட்டியலும
கூறும். தொள்ளாயிரமும என்றது அரும்பைத் தொள்ளாயிரம் போன்ற
நூல்களைநோக்கிப் போலும். (13)


ஒலியந்தாதி, பன்மணிமாலை
   
39. ஈட்டிய வீரெண் கலைவண்ணச் செய்யுள்
                               இயைந்தமுப்பான்
கூட்டிய 1நீடொலி யந்தாதி கூறும் கலம்பகத்தின்
2ஆட்டிய வம்மனை யூச லொருபோகும் 3அற்றுவந்தாற்
பாட்டியல பன்மணி மாலையென் றோதுவர் பாவலரே.

     (உரை - I). எ - ன், ஒலியந்தாதியும் பன்மணி மாலையும்
ஆமாறுணர்த்.........று.

     (இ - ள்). பதினாறு கலை வகுத்த ஈரொலி வண்ணம் முப்பது கூடி
வருவது ஒலியந்தாதியாம்; முன் சொன்ன கலம்பகத்தில் அம்மானையும்
ஊசலும் ஒருபோகும் ஒழிந்து ஏனையவெல்லாம் வருவது பன்மணி மாலையாம்
எ - று.

     ஒலியந்தாதியையே ஒரு சாரார் பல்சந்த மாலையென்று அடக்குவர்.
வண்ணமென்பதும் வகுப்பென்பதும் ஒன்றென்று சொல்லுவர். அஃது ஆசிரிய
விருத்தம் ஆதலும் [என்று] அறிக; ஒரு சாரார் அளவியற் றாண்டகமென்ப.

     இவையெல்லாம் அந்தாதி மண்டலித்து முடிதல் அதிகார வசத்திற்
கொள்க.

     (உரை II). எ - து, பதினாறு கலை ஓரடியாக வைத்து, இப்படி
நாலடிக்கு அறுபத்து நாலு கலை வகுத்து, வண்ணமுங் கலையும் வைப்பும்
தவறாமல் அந்தாதியாக முப்பது செய்யுள் பாடுவது ஒலியந்தாதி என்று
சொல்லப்படும்; (அம்மானை) ஊசல், ஒருபோகு, (இன்றி) வெண்பா
வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா
கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக்
கடைமுடிவிலே வெள்ளை விருத்தம்