பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 33

     ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் இப்படி நூறு
பாடப்படுவது பன்பணிமாலையென்று வழங்கப்படும் எ - று.


     (கு - ரை).
அளவிற்றாண்டகம் என்பாருள் (உரை 1) பிரபந்தத்
திரட்டு
டையார் ஒருவர்; ‘மூவெட் டிரண்டெழுத்தாய் மூன்றடிநான்காய்ச்
சந்தப், பாவதன்மீத் தாண்டகமுப் பானாக-மேவலொலி யந்தாதி’ (க. 74.)
பாட்டியல் - பிரபந்தம்; தற்சிறப். 1. கலம்பக உறுப்புக்களுள் ஊசலையும்
ஒருபோகையும் நீக்கி அம்மனை உள்பட மற்றெல்லா உறுப்புக்களும் வருவது
பன்மணி மாலை என்று பிரபந்தத் திரட்டுக கூறும்; ‘ஊசலொரு
போகொழிய ஓதுங் கலம்பகப்பா, வாசமுறும் பன்மணி’ மாலையம். (க. 14.)

     (பி - ம்) 1 ‘நீட்டொலி’ 2 ‘வாட்டிய’ 3 ‘மற்றதினற்’ (14)


சின்னப்பூ, தசாங்கம்
   
40. நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது
1சேரவோர் தொண்ணூ றெழுபதோ டைம்பது செப்பிடுங்கால்
ஆரியர் சின்னப்பூ வென்றே யுரைப்பர் அவையொருபான்
சாரிற் றசாங்க மெனவுரை யாநிற்பர் சான்றவரே.

     (உரை I). எ - ன், சின்னப்பூவும் தசாங்கமும் ஆமாறு
உணர்த்...................று.

     (இ - ள்). முன்சொன்ன தசாங்கங்களை நேரிசை வெண்பாவினால்
மறையோர் முதலாய் வருவனவாய்ச் சிறகுமுறை நூறு, தொண்ணூறு, எழுபது,
ஐம்பதுமாக மொழிவது சின்னப்பூவாகும்; மலை முதலாகிய பத்தையும் ஒரோ
ஒன்று உரைப்பது தசாங்கமென்றவாறு.

“உரைத்த தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா
அமரரைச்
செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்
ஏனை யோர்க்குத் தசாங்கமல் லாதன
என்ப இயல்புணர்ந் தோரே”

என்பது முள்ளியார் கவித்தொகை; ஆகலின் அமரர்க்கும் அரசர்க்கும
சின்னப் பூ ஆவது. ஒழுந்தோர்க்குத் தசாங்கம் எடுத்தோதல் சிறுபான்மை
யென்பர்.