பக்கம் எண் :
 

58நவநீதப் பாட்டியல்

3.பொதுமொழியியல்
   
 
பொதுப்பாயிரம் தற்சிறப்புப்பாயிரம்
   
69. ஈவா ரியல்பிவை யீகை மூறைமை இவையுணர்தல்
ஆவார் திறமிவை கேளாய லாதியிந் நாற்பகுதி
1தாவா துரைத்தல் பொதுப்பா 2யிரந்தனி வானவரை
3ஓவா திறைஞ்சி யதிகார முன்ன ருரைப்பர்களே.

     (உரை I).
எ - ன், பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும்
உணர்த்..........று.

     (இ - ள்.) ஆசிரியரது இயல்பும், அவர் உரைக்கும் முறைமையும்,
மாணாக்கரது இயல்பும், அவர் கேட்கும் முறைமையும், என்னும்
நான்கினையும் உரைப்பது பொதுப்பாயிரமாம்; தெய்வ வணக்கமும் செயப்படு
பொருளும் ஆமாறு செப்புதல் சிறப்புப் பாயிரமாம் எ - று.

“ஈவோன் றன்மை ஈத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
ஈரிரண்டென்ப பொதுவின் றொகையே”

என்றாராகலின்.

“வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் செய்யச்
சிறப்பென்னும் பாயிரமாம்.”

ஈவோன்றன்மை முதலாகச் சொல்லப்பட்ட நான்கிற்கும் முறைமை கண்டு
கொள்க.

     (உரை II). எ - து, நூலுரைக்கும் ஆசிரியன் இயல்பும்
..............................நூல் கற்கு முறைமையும் உரைப்பது பொதுப்பாயிரமாம்.
முன்னர் வணக்கம் உரைக்கப்படும்எ - று.

     (கு - ரை). உணர்தல் ஆவார் - மாணாக்கர். கேள் ஆயல் -
ஆசிரியர் வாயிலாகக் கேள்வியை ஆராய்தல் ; கேட்கும் முறைமை
என்றபடி ; கேள்; முதனிலைத் தொழிற் பெயர். இவற்றுடன் நூலையுங்கூட்டி
நன்னூலார் பொதுப்பாயிரம் ஐந்தென்பர்.

     (பி - ம்). 1 ‘ஓவாது’ 2 ‘யிரந்தனில் வானவரை’ 3 ‘ஓவா திறைஞ்ச
லாதிகார முன்ன ருரைப்பர்களே’