பக்கம் எண் :
 

60நவநீதப் பாட்டியல்

     (கு - ரை). யாப்பு - தொகை வகை முதலியவற்றுள் இன்ன தென்பது.
உரை II உள்ள ஏட்டில் இக்காரிகை பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது.

     (பி - ம்). 1 ‘இந்நூல் வடநூல் வழி’ (3)

 
நூலின் இயல்பு
   
72. முதல்வழி 1சார்பென மூவகைத் தந்திரம் சூத்திரமும்
உதவு 2விருத்தி யுயர்தரு மம்முதல் நான்கேழ்வரை
மதவிகற் பம்பத்துக் குற்றத்துத் தீர்ந்துபத் துக்குணத்தின்
நுதலும் பதின்மூன்றுள் முப்பத் திரண்டுள 3நூனெறியே.

     (உரை I), எ - ன், நூல் ஆமாறு உணர்த்...........று,

     (இ - ள்.) தந்திரம் சூத்திரம் விருத்தி என்னும் மூன்றும், அறம்
பொருள் இன்பம் வீடென நான்கும், எழுவகை ஆசிரிய மதவிகற்பமும்
உடைத்தாய்ப் பத்துவகைக் குணத்தான் பதின்மூன்று வகையான்
உரைபெறினும் முப்பத்திரண்டு தந்திரவுத்தியொடு புணர்ந்தது நூலாம்.

     அந்நூல் முதனூல், வழிநூல், சார்புநூல், [எதிர் நூல்] என்னும்
கூறுபாட்டான் ஆம் எ - று.

“அவற்றுள்
வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்.”
“முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறின்
அழியா மரபினது வழி நூலாகும்.”
“இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்.”
“தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுப்பது
எதிர் நூல் என்பர் ஒருசா ரோரே.”

[இவற்றான் நூலாதல்]

“இற்றகுமின்ன பகுதியி னிவற்றா
லென்ன வன்னுறுப் பானது தந்திர மாகும்.”