பக்கம் எண் :
 

62நவநீதப் பாட்டியல்

“............ ........... ........... ............
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்று சோர்ந்திறுதல் நின்றுபய னின்மை
......... ............. ............ ..............”

எனவிவை, பத்துவகைக் குணமாவன.

“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி யுரைத்தல்
ஓசை யுடைமை ஆழ முடைத்தாதல்
உலக மலையாமை முறையின் வைத்தல்
விழுமியது பயத்தல் விளங்கிய வுதாரணம்”

என இவை, பதின்மூன்றுவகை உரையாவன:

“சூத்திரம் தோற்றல் சொல்வகுத்தல்
சொற்பொரு ளுரைத்தல் வினாவுதல் விடுத்தல்
விசேடங் காட்டல் உதாரணங் காட்டல்
ஆசிரிய வசனங் காட்டல் அதிகார வரவுகாட்டல்
தொகுத்து முடித்தல் விரித்துக் காட்டல்
துணிவு கூறல் பயனொடு முடித்தல்”

என இவை. முப்பத்திரண்டு தந்திர வுத்தியாவன;


“நுதலிப்புகுதல் ஓத்துமுறை வைத்தல்
தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல்
முடிவிடங் கூறல் முடித்துக் காட்டல்
தானெடுத்துக் காட்டல் ஒப்பின் முடித்தல்
பிறன்கோட் கூறல்..........
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
மாட்டெறிந் தொழிதல் ....... ........
பிறர்நூன் முடித்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகவிரித் துரைத்தல்
இறந்தது விலக்கம் எதிரது போற்றல்
முன்மேற் கோடல் பின்னது நிறுத்தல்
எடுத்துக் காட்டல் முடிந்தது முடித்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
தொடர்ச்சொல் புணர்த்தல் யாப்புறுத் தமைத்தல்