பக்கம் எண் :
 

பொது மொழியியல் 67

ஓதியறிதல், வீடென்று சொல்லப்பட்ட சரியை கிரியை யோகம் ஞானம் என்று
சொல்லப்பட்டவற்றையறிந்து முறைமை தவறாமல் நடப்பது அரசர்க்கு
அடுத்தது எ - று.

     இந்தக் கவியிற் சொன்ன மற்றத் தொழிலும் உணர்ந்து கொள்ளுக.

     (பி - ம்.) 1 ‘வேத நெறியின் விளைசமயம்’ 2 ‘ தாங்க லரசர்க்’ (8)


வணிகர் இயல்பு
   
77. இருபிறப் 1போத லெரிவேட்ட லீதல் இருநிதியம்
வருதிறத் தானல்ல வாணிபஞ் செய்தல் நிரைவளர்த்தல்
பெருநிதிக் கோன்கழல் 2பேண லவனென்று பேசநிற்றல்
உரிமைதப் 3பாவணி கர்க்கியல் பாமென்பர் ஒண்ணுதலே.

     (உரை I). எ - ன், வணிகர்க்குரியன இவை என்பதுணர்த்..........று.

     (இ - ள்). இரண்டு பிறப்பும், ஓதல், யாகம், வேட்டல், ஈதல்,
பொருள்வரவாகிய வாணிபஞ்செய்தல், ஆனிரை வளர்த்தல்,
வயிச்சிரவணனைப் போற்றல், அவன் போலென்று சொல்லுவித்துக் கொள்ளல்
வணிகர்க்குரியன எ - று.

     (கு - ரை). வயிச்சிரவணன் - குபேரன். (9)

     (பி - ம்.)
1 ‘பாளர்’ 2 ‘பேணல் வருவன’ 3 ‘பாத வணிகர்க்கியலது’

இதுவுமது
   
78. உறுவது கோடல் வருபயன் தூக்கல் உழவின்றொழில்
இறுவதஞ் 1சாமை யிடரிற் றெளிதரல் ஈட்டுதற்கு
நெறிபல போதல் முனிவில னாதல் 2நிரைவளையாய்
குறியென லாகுங் குலவணி கர்க்குக் குவலயத்தே.

     (உரை I).
எ - ன், இதுவும் வணிகர்க்குரிய பொருளிவை யென்பது
உணர்த்........று

     (இ - ள்). உறுவது கோடல், வருபயன் தூக்கல், உழவின் தொழில்,
இறுவதஞ்சாமை, இடரிற் றெளிதரல், பொருள்