பக்கம் எண் :
 

68நவநீதப் பாட்டியல்

தொகுத்தற்குப் பலவழியும் நடத்தல், முனிவு தவிர்தல் என்னும் எழுவகையும்
வணிகர்க் குரியன. இவை இவரைப் புகழும் செய்யுளின் கண் வருக எ - று.

     (உரை II). எ - து, வணிகர் அறுவகைத் தொழில்.

     (கு - ரை). இறுவது - நஷ்டப்படுவது. இடரில் தெளிதரல் - துன்பம்
வந்தபோது தேற்றம் கொள்ளல். (10)

     (பி - ம்.) 1 ‘சாம லிடத்திரு மாலடி யேத்திமறை ’ 2 ‘நிரை வளர்த்தல்’


வேளாளர் இயல்பு
   
79. திருந்திய நல்லறந் தீராத செல்வம் ஒழுக்கமேன்மை
வருந்திய சுற்றத்தை யாற்றுதல் மன்னர்க் கிறையிறுத்தல்
பொருந்திய வொற்றுமை கோடல் புகழும் வினைதொடங்கல்
விருந்து புறந்தரல் வேளாண் குடிக்கு விளம்புவரே.

     (உரை I). எ - ன், சூத்திரர்க்குரியன இவை யென்றும் அவரைப்
புகழுமிடத்து இவை வரப் பெறுமென்றும் உணர்த்...........று.

     (இ - ள்). நல்லறம் புரிதல், செல்வ முடைமை, ஒழுக்கமுடைமை,
தளர்ந்த சுற்றத்தை யாற்றுதல், மன்னர்க்கு இறை யிறுத்தல், ஒற்றுமை
கோடல், புகழப்படும் கருமத்தைத் தொடங்கல், விருந்தோம்பலென்னும்
இவை வேளாண்மைப் புகழ்ச்சிக்கு உரிய எ - று. (11)

 
இதுவுமது
   
80. வாணிபஞ் செய்த லுபகார மாசாரம் வாய்ந்த செயல்
பேணி யுழுத லிருபிறப் பாளர் 1நெறிவழுவா
ஆணை வழிநிற்ற லானிரை போற்றல் அகன்றவல்குற்
பூண்முலை யாயிவை வேளாண் குடிக்குப் புகன்றனரே.

     (உரை I). எ - ன், இதுவும் சூத்திரர்க் குரியன சில உணர்......று.

     (இ - ள்). வாணிபம் செய்தல், உபகாரம் ஆசாரம் வாய்ந்த செயல்,
உழவைப் பேணல், இருபிறப்பாளர் நெறிவழுவாமல்