பக்கம் எண் :
 

பொது மொழியியல் 69

அவர் ஏவுதலைச் செய்தல் ஆனிரையைப் போற்றல் இவை வேளாண்டொழில்
எ - று.

     (உரை II). எ - து, வேளாளர் அறுவகைத் தொழில்.....பசுக்களை
வளர்த்தல், தானம் பண்ணுதல், வாணிபஞ்செய்தல், உழவு பயிர் செய்தல்,
மன்னருக்கு இறை யிறுத்தல், வேதநெறிவழுவாத ஒழுக்கத்துடனே தன்னுடைய
சாதி மார்க்கம் தவறாதே இப்படி இருப்பது வேளாளர்க்கு இயல்பாம் எ - று.

     (பி - ம்.) 1 ‘உரை வழுவா ’ (12)


 
செய்யுள் மொழியின் முறைமை
   
81. தானைத் தலைவரை யேவல்பெற் றாரைத் தனிவெண்குடைக்
கோனை யடுத்த பகைவரைக் கூறுலுங் கோற்றொழிலால்
ஏனைக் குறுநில மன்னவர் தங்களை மன்னரென்ன
மானப் புகழ்தலுஞ் செய்யுண் மொழியின் மரபென்பரே.

     (உரை I). எ - ன், ஒருசார் அரசர்க்கோதிய இலக்கணம் உணர்த்........று.

     (இ - ள்). தானைத் தலைவரை, ஏவல் பெற்றாரை, தமது
நாயகமாகியவரை அடுத்தவரது பகைவரைக் கோன்றொழிலாற் கூறலும்,
ஒழிந்த குறுநில மன்னரை முடியுடை மன்னவர் போல உரைத்தலும் செய்யுண்
மொழியின் முறைமை எ - று.

“அரச னருள்பெறி னெல்லார்க்கு முரித்தே
காணிகை தவிர்தலும் விரித்துரை வேண்டலும்
ஓங்கிய சிந்தையொடு தெய்வம் பணிதலும்
அறுபது முதலா வைம்பதிற் றிரட்டி
அனைவர்க்கு முரித்தே யாயுங் காலே”

என்பது
பொய்கையார் கலாவியல்.

     (உரை II). எ - து, தானைத்தலைவர் முதலாகிய பேர்களைக்
குற்றளவுப் பாட்டினால் பாடலாம். குறுநில மன்னரை முடி புனைந்த
மன்னர்க்குச் சமமாகப் பாடலாம் எ - று.

     (கு - ரை.) தானைத்தலைவரை - சேனாபதிகளை. ஏவல் பெற்றாரை -
அரசன் ஏவும் காரியங்களைச் செய்யும் உத்தியோகஸ்தரை ; 35 ; 40, உரை.

     (பி - ம்.) 1 ‘குற்றளவும்’ (13)