பக்கம் எண் :
 
கன

    கன்றுக்குட்டி என்று இளமைப் பெயரிரண்டு இணைந்து மாட்டிளமைக்கு
ஆகி வருதல் வழுவமைதி.

284. நூ: மகஇறு நிலைபெற் றுயர் திணைக் காகும்.

    பொ: மக என்னும் இளமைப் பெயர் ஆண், பெண், பலர் பாலீறு
பெற்று உயர்திணையாகும்.

     சா: மக+அன்=மகன்; மக+அள்=மகள்; மக+அர்=மக(£)ர். 
மக+கள்+மகக்கள்--> மக்கள்.  இது மாந்தரையும் குறிக்கும்.  (மா+கள்)
மாக்கள் பலவின்பாற் சொல்லே; அத்தகையாரையும் சுட்டும்.

மற்று மாக்கள் (மணிமேகலை) என நன்மக்களைக் குறிக்கும் வழக்கு மகக்கள்
என்னும் புணர்ச்சியில் இருகுறில் ஒரு நெடில் திரிபு பற்றி மாக்கள் என
நீண்டு நின்றதெனக் கொள்க.

285. நூ:  பார்ப்பு திரிந்து பெண்ணிள மைக்காம்;
         பிள்ளை உயர்திணை ஆண்பெண் பொதுப்பெயர்

    பொ: ‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை’ என்று தொல்காப்பி யர்
கூறிய இளமைப் பெயரிரண்டில் பார்ப்பு என்பது திரிந்து பெண்டிர்க்குச்
சூட்டுப் பெயராதலும், பிள்ளை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுப்
பெயராதலும் நடைமுறை.

    சா: பார்ப்பு-பாப்பு-பாப்பா=பாப்பாத்தி (குழந்தையம்மை) இவை இன்றும்
பெண் குழந்தையர்க்கு வழக்கிலுள. ஆண் பிள்ளை; பெண் பிள்ளை;
ஆண்பிளே,பெண்பிளே எனத்திரிந்து பெரியோரைக் குறித்தல் வழு.
ஆண்பிளைப் பிள்ளை,பெண் பிளைப் பிள்ளை என வருதல் மிகு வழு. 
பிள்ளை என்பது தனித்துக்குறிக்கும் போது ஆணைச்சுட்டுவதும் உண்டு.

மரபுப்புறனடை

286. நூ: கூறிய வற்றுள் மாறியும் வருமே.

    பொ: கூறிய சொற்களிற் சில மரபு மாறியும் வரும்.

    சா: தென்னம்பிள்ளை; கிளிப்பிள்ளை; எலிக்குஞ்சு; மயில் குட்டி
போடும் (சிறார் வழக்கு) எருமைக் கன்று முதலியன அத்தகையன.

    பிள்ளை குட்டியெல்லாம் நலமா?  குட்டி சிறு பெண்ணாரையும், சிறு
பொருள்களையும் குறித்தல் இக்கால வழக்கு.  அவருக்குப்
பிள்ளையா? குட்டியா?  நல்ல குட்டி; குட்டிச்சுவர்; பூனைக்குட்டி.  ஐயா,
அப்பா, ஆத்தா, அம்மா என்னும் ஆண் பெண்