பக்கம் எண் :
 
தவ

    தவிரின் இரண்டும் தவிரும்.

பச்சிலையால் | உடல் | நலமாயிற்று
கா சொ
அறிவியலால் சமயங்கள் தூய்மையாயின
கா சொ

    இவற்றுள், பச்சிலை தெரிந்துரைத்தாரைக் கண்டு உரையாடுங்கால் அவர
முகக்குறிப்பால் நலமா என்னும் வினா வறிந்து உடல் நலமாயிற்று என
நேரிட்ட மெய்ப்பாட்டான் காரணம் மறைந்து வருவதும் ஒருவகை. 
இரண்டுமல்லது: உடல்நலமே எனல்.

சில எச்சங்கள்

310. நூ: ஆய்எனும் ஆக்க வினைக்குறை ஆக்கமும்
        வெறுமையும் முற்றோ டிணைந்தெச் சமுமாம்.

    பொ: ஆய் என்னும் ஆக்கப்பொருள் தரும் வினையெச்ச உருவம்
ஆக்கப்பொருளும் வெறுமையும், முற்றடுத்து எச்சமாக்கலும் ஆகும்.

    உடல் நன்றாய் விட்டது.  நாய் நன்றாய்க் கடித்தது.  என்புழி முன்னது
ஆக்கம்; பின்னது நன்கு என்னும் பொருளே தந்து வெறுமையாய் நிற்றலும்
காண்க.  இவை முறையே ஆகி+ஆய்; ஆக+ஆய் என்பதன் திரிபே. 
ஆயினும் தனித்தியங்கலின் கூறினாம்.

    ஆயிற்று (ஆய்ப் போயிற்று) எனத் தீர்ந்ததைக் காட்டல் மிஞ்சியது
என்பது போன்ற மங்கலப் பண்பாட்டு வழக்கு.  முற்றெச்சக் காட்டு:-தமியர்
உண்டலும் இலரே - தமியராய்.

311. நூ: ஆவது எண்குறி நீக்கல் விளக்கம்.

    பொ: ஆக்கவினையடியாய் அமைந்த ஆவது, எண்குறித்தற்கும்,
ஒன்றை நீக்கி மற்றொன்றைக் கூட்டற்கும், விளக்கற்கும் குறியாம்.

    சா: பதினோராவது நிலை.  இரண்டாவது கிழமை எனவும் வரும். 
எண்ணொடு வருங்கால் 10-வது நிலை என ‘ஆ’ மறைந்ததைத் தொகு
குறியிட்டு எழுதுக.  நீயாவது அவனாவது வருக என்பது நீக்கிக்கூட்டல். 
இதனை முன்னர் அவனாதல் நீயாதல் என்றும், அவராயினும் நீயாயினும்
என்றும், அவனோ நீயோ என்றும் வழங்கல் வழக்கு.  பொதுவுடைமையாவது
எனைத்துவகையிலும் ஏற்றத் தாழ்வற்ற குமுகாயத்தை எல்லாத் துறையினும்
படைப்பது - விளக்கம்.  அது என்பதனோடு இணைந்து அதாவது